மேலும்

வடக்கு, கிழக்கில் 66 வீதிகளை புனரமைக்க சிறிலங்கா அமைச்சரவை அங்கீகாரம்

sri-lanka-emblemவடக்கு, கிழக்கு மாகாணங்களில் போரினால் பாதிக்கப்பட்டுள்ள 66 வீதிகளை புனரமைப்புச் செய்து, தரமுயர்த்துவதற்கு சிறிலங்கா அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது.

வடக்கு கிழக்கில் 66 வீதிகளைப் புனரமைத்து. தரமுயர்த்துவதற்கு அனுமதி கோரும், அமைச்சரவைப் பத்திரத்தை சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அமைச்சரவைக் கூட்டத்தில் சமர்ப்பித்திருந்தார்.

முதற்கட்டமாக,  200 மில்லியன் டொலர் செலவில், 2500 கி.மீ நீளமான வீதிகள் புனரமைக்கப்படவுள்ளன.

யாழ். மாவட்டத்தில், வழுக்கையாறு வீதி, புங்குடுதீவு- குறிகட்டுவான் வீதி, யாழ்ப்பாணம்- மானிப்பாய்- காரைநகர் வீதி, பொன்னாலை- பருத்தித்துறை வீதி, எழுதுமட்டுவாள்- நாகர்கோவில் வீதி மற்றும் நயினாதீவு, குறிகட்டுவான் இறங்குதுறைகள் என்பன புனரமைக்கப்படவுள்ளன.

கிளிநொச்சி மாவட்டத்தில், முறிகண்டி- கனகபுரம்- பரந்தன் வீதி,

முல்லைத்தீவு மாவட்டத்தில், கொக்கிளாய் கடலேரி பாலம், வட்டுவாகல் பாலம், வற்றாப்பளை பிரதான வீதி,

மன்னார் மாவட்டத்தில், மகிழங்குளம் –பள்ளமடு வீதி, பிரமனாலங்குளம் வீதி, பெரிய பண்டிவிரிச்சான் வீதி, முள்ளிக்குளம் வீதி,

மட்டக்களப்பு மாவட்டத்தில், கிரான் பாலம், சந்திவெளி- திகிலிவெட்டை பாலம், மட்டக்களப்பு- கல்குடா வீதி, என்பன புனரமைப்புச் செய்யப்படவுள்ளன.

திருகோணமலை, அம்பாறை மாவட்டங்களிலும், பல வீதிகள் அபிவிருத்தி செய்யப்படவுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *