மேலும்

20 ஆவது திருத்தச்சட்ட வரைவு – பொதுவாக்கெடுப்புக்கு உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றில் மனு

Supreme Courtசிறிலங்கா அரசாங்கத்தினால் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ள 20 ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்ட வரைவுக்கு எதிராக – கூட்டு எதிரணியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்களாக பேராசிரியர் ஜி.எல்.பீரிசும், உதய கம்மன்பிலவும் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.

மாகாணசபைகளைக் கலைக்கும், அவற்றுக்குத் தேர்தல் நடத்தும் நாளை தீர்மானிக்கும் அதிகாரத்தை நாடாளுமன்றத்துக்கு வழங்கும் வகையிலும், ஒரே நாளில் மாகாணசபைத் தேர்தலை நடத்தும் வகையிலும், 20 ஆவது திருத்தச்சட்ட வரைவு நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ளது.

இதற்கு எதிரான மனுவொன்றை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள பேராசிரியர் ஜி.எல்.பீரிசும், உதய கம்மன்பிலவும், 20 ஆவது திருத்தச்சட்ட வரைவு நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்படுவதுடன், பொதுவாக்கெடுப்பும் நடத்த வேண்டும் என்று உத்தரவிட வேண்டும் என்று கோரியுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *