மேலும்

கிளிநொச்சியில் சிறிலங்கா இராணுவத்தினர் மீது வாள்வெட்டு – 6 பேர் கைது

bloodகிளிநொச்சி – ஊற்றுப்புலம் பகுதியில் சிறிலங்கா இராணுவத்தில் பணியாற்றும் தமிழர்களான இரண்டு சிப்பாய்கள் மீது, நேற்றுமுன்தினம் இரவு வாள்வெட்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

கிளிநொச்சியில் உள்ள சிறிலங்கா இராணுவத்தினரின் பண்ணை ஒன்றில் பணியாற்றும் இரண்டு இராணுவத்தினர் ஊற்றுப்புலம் பகுதியில் உள்ள தமது இல்லத்துக்கு விடுமுறையில் சென்றிருந்தனர்.

நேற்றுமுன்தினம் இரவு 10 மணியளவில் இவர்கள் மீது வாள்வெட்டு தாக்குதல் நடத்தப்பட்டது.

இதில் காயமடைந்தவர்கள் கிளிநொச்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். பின்னர் இவர்களில் ஒருவர் கொழும்பு தேசிய மருத்துவமனைக்கும் கொண்டு செல்லப்பட்டார்.

இந்தச் சம்பவம் தொடர்பாக ஊற்றுப்புலம் பகுதியைச் சேர்ந்த ஆறு பேர் சிறிலங்கா காவல்துறையினரால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *