மேலும்

20 ஆவது திருத்தச் சட்டவரைவு நாடாளுமன்றத்தில்

parliamentஎதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வந்த போதிலும், சிறிலங்கா அரசாங்கம் நேற்று 20 ஆவது திருத்தச்சட்ட வரைவை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளது.

மாகாணசபைகளைக் கலைக்கும் அதிகாரத்தை நாடாளுமன்றத்துக்கு வழங்கும் வகையிலும், மாகாணசபைத் தேர்தல்களை ஒரே நாளில் நடத்தும் வகையிலும், இந்த 20 ஆவது திருத்தச்சட்ட வரைவு தயாரிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே வர்த்தமானியில் வெளியிடப்பட்ட இந்த திருத்தச்சட்ட வரைவு, நாட்டின் அரசியலமைப்பை மீறும் வகையில் அமையவில்லை என்று சிறிலங்கா உச்ச நீதிமன்றம் கருத்து வெளியிட்டிருந்தது.

இந்த நிலையில், நேற்று நாடாளுமன்றத்தில் இந்த திருத்தச்சட்ட வரைவை சிறிலங்கா அமைச்சர் கயந்த கருணாதிலக நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தார்.

இந்த திருத்தச்சட்ட வரைவுக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பை வெளியிட்டு வந்த போதிலும், சிறிலங்கா அரசாங்கம் நாடாளுமன்றத்தில் முன்வைத்துள்ளது.

அதேவேளை, இந்த திருத்தச்சட்ட வரைவுக்கு மாகாணசபைகளின் ஒப்புதலும் அவசியம் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *