13 இலங்கையர்களை நாடு கடத்தியது அவுஸ்ரேலியா
அவுஸ்ரேலியாவில் இருந்து நாடுகடத்தப்பட்ட 13 இலங்கையர்கள் நேற்றுக் காலை, கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்.
அவுஸ்ரேலியாவுக்குள் சட்ட விரோதமாக நுழைய முயன்ற போது கைது செய்யப்பட்டவர்களே இவர்கள் என்று கூறப்படுகிறது.
கட்டுநாயக்க விமான நிலைய குடிவரவு குடியகல்வு திணைக்கள பாதுகாப்பு அதிகாரிகளால், தடுத்து வைக்கப்பட்ட இவர்கள், குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
இவர்களிடம் தொடர்ந்து விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றன என்று சிறிலங்கா காவல்துறை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.