மேலும்

மாதம்: June 2017

விக்னேஸ்வரனுக்கு ஆதரவாக வடக்கில் இன்று கடையடைப்பு – பல பகுதிகள் முடக்கம்

வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, தமிழ் மக்கள் பேரவையினால்  அழைப்பு விடுக்கப்பட்ட முழு அடைப்புப் போராட்டத்தினால் இன்று வடக்கு மாகாணத்தில் பல பகுதிகளிலும், இயல்பு நிலை பாதிக்கப்பட்டது.

வடக்கு அரசியல் குழப்பம் தீரவில்லை – இன்று காலையும் சமரசப் பேச்சு

வடக்கு மாகாண அரசியலில் ஏற்பட்டுள்ள குழப்ப நிலைக்கு இன்னமும் முடிவு காணப்படவில்லை என்றும், இன்று காலையும் இதுதொடர்பாக பேச்சுக்கள் நடத்தப்படவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

முதல்வருக்கு ஆதரவாக 15 பேர் கையொப்பம் – ஆளுனரிடம் கையளிப்பு

வடக்கு மாகாண முதலமைச்சருக்கு எதிராக தமிழ் அரசுக் கட்சியின் உறுப்பினர்களால் முன்வைக்கப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணையை கைவிடச் செய்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், முதலமைச்சர் மீது நம்பிக்கை தெரிவித்து 15 உறுப்பினர்கள் நேற்று ஆளுனரிடம் கடிதங்களைச் சமர்ப்பித்துள்ளனர்.

சம்பந்தன் – விக்கி பேச்சில் இணக்கம்? : நம்பிக்கையில்லாப் பிரேரணை கைவிடப்படலாம்

வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் தமிழ் அரசுக் கட்சி கைவிடுவதற்கும், இரண்டு அமைச்சர்களை கட்டாய விடுப்பில் அனுப்ப எடுத்த முடிவை  முதலமைச்சர் விலக்கிக் கொள்வதற்கும் இணக்கம் காணப்பட்டுள்ளதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.

சிறிலங்காவில் தீவிரவாத தாக்குதல்களுக்கு வாய்ப்பு- பிரித்தானியா எச்சரிக்கை

சிறிலங்காவில் தீவிரவாத தாக்குதல்கள் நடப்பதற்கான வாய்ப்புகளை நிராகரிக்க முடியாது என்று பிரித்தானியா தெரிவித்துள்ளது.

மேஜர் ஜெனரல் கபில ஹெந்தவிதாரணவிடம் 8 மணித்தியாலங்களுக்கு மேல் விசாரணை

சிறிலங்காவின் முன்னாள் தேசிய புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் கபில ஹெந்தவிதாரணவிடம் நேற்று எட்டு மணிநேரத்துக்கும் மேலாக விசாரணை நடத்தப்பட்டது.

மகிந்த, உதயங்கவைச் சந்தித்த பிரதியமைச்சரிடம் விளக்கம் கோர அமைச்சரவை கூட்டத்தில் முடிவு

சுற்றுலா மற்றும் கிறிஸ்தவ விவகாரங்களுக்கான பிரதி அமைச்சர் அருந்திக பெர்னான்டோவிடம் விளக்கம் கோருவதற்கு அரசாங்கம் முடிவு செய்திருப்பதாக, சிறிலங்கா அமைச்சரவைப் பேச்சாளர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.

இராணுவ நீதிமன்ற விசாரணையில் குற்றவாளியாக காணப்பட்ட பிரிகேடியர் குணவர்த்தன

ரதுபஸ்வெல துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் பிரிகேடியர் தேசப்பிரிய குணவர்த்தனவை குற்றவாளியாக கண்டு, அவரைப் பதவியிறக்கம் செய்யுமாறு இராணுவ நீதிமன்றம் அளித்த பரிந்துரையை சிறிலங்கா இராணுவத் தளபதி நடைமுறைப்படுத்தவில்லை என்பது தெரிய வந்துள்ளது.

முதலமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை – ஆளுனரிடம் கையளிப்பு

வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை நேற்றிரவு வடமாகாண ஆளுனர் ரெஜினோல்ட் குரேயிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

முதல்வர் விக்னேஸ்வரனுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை?

வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை ஒன்றை ஆளுனர் ரெஜினோல்ட் குரேயிடம் கையளிப்பதற்கான நடவடிக்கைகள் இடம்பெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.