முதலமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை – ஆளுனரிடம் கையளிப்பு
வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை நேற்றிரவு வடமாகாண ஆளுனர் ரெஜினோல்ட் குரேயிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
வடமாகாணசபையின் அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் தலைமையிலான 16 மாகாணசபை உறுப்பினர்கள் வட மாகாண ஆளுனரை நேற்றிரவு சந்தித்தனர்.
அமைச்சர்கள் குருகுலராசா, டெனீஸ்வரன், சத்தியலிங்கம் ஆகியோரும் ஆளுனரைச் சந்தித்திருந்தனர். எனினும், அமைச்சர் ஐங்கரநேசன் இதில் பங்கேற்கவில்லை.
இதன்போதே, வடக்கு மாகாண முதலமைச்சர் மீதான நம்பிக்கை அற்று விட்டதாக கூறியும் அவரை மாற்றக் கோரியும், வடக்கு மாகாணசபையின் 22 உறுப்பினர்கள் கையெழுத்திட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணையை, கையளித்தனர்.
அதனைப் பெற்றுக் கொண்ட ஆளுனர் அரசியலமைப்புச் சட்டத்தின் படி உரியை நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளார்.
இந்தக் கடிதத்தில், ஆளும் கட்சியைச் சேர்ந்த 16 உறுப்பினர்களும், எதிர்க்கட்சியின் 6 உறுப்பினர்களும் கையெழுத்திட்டுள்ளனர்.
இதனிடையே, முதலமைச்சர் அவையில் அறிவித்த முடிவை வரவேற்றிருந்த எதிர்க்கட்சித் தலைவர் சி.தவராசாவும், நேற்றிரவு ஆளுனரைத் தனியாகச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.