மேலும்

மாதம்: April 2017

10 நாடுகளில் கடற்படைத் தளங்களை அமைக்க சீனா திட்டம்- சிறிலங்காவும் உள்ளடக்கம்?

பத்து நட்பு நாடுகளில் சீனக் கடற்படையின் தளங்கள் அமைக்கப்பட வேண்டும் என்று சீன இராணுவத்தின் அதிகாரபூர்வ நாளிதழான PLA Daily ஆசிரியர் தலையங்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

குப்பைமேடு சரிந்த இடத்தில் பரவியுள்ள மீதேன் வாயு – ஜப்பானிய நிபுணர்கள் எச்சரிக்கை

மீதொட்டமுல்லவில் குப்பை மேடு சரிந்த பகுதியில் மீதேன் வாயுவின் அளவு அதிகமாக இருப்பதாக ஜப்பானிய நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சாதாரணதரத் தேர்வு முடிவுகளில் வடக்கு, கிழக்கு மாகாணங்கள் படுமோசம்

அண்மையில் வெளியான கபொத சாதாரண தரத் தேர்வு முடிவுகளில், திருகோணமலை கல்வி வலயத்தைச் சேர்ந்த ஐந்து பாடசாலைகளில் இருந்து எந்தவொரு மாணவரும் தேர்ச்சி பெறவில்லை என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.

அதிபர் தேர்தலுக்கு முன்னர் கூட்டமைப்புக்கு எழுத்து மூலம் வாக்குறுதி வழங்கினார் மைத்திரி

சிறிலங்கா அதிபர் தேர்தலில் பொதுவேட்பாளராக போட்டியிட்ட போது, சிறிலங்கா படையினர் வசம் இருக்கும் தனியார் காணிகளை விடுவிப்பதாக மைத்திரிபால சிறிசேன தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எழுத்து மூலம் உறுதி வழங்கியிருந்தார் என்று நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

அம்பாந்தோட்டை துறைமுக திருத்தப்பட்ட உடன்பாட்டு வரைவு அமைச்சரவையில்

அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனாவின் மேர்ச்சன்ட்ஸ் ஹோல்டிங்ஸ் நிறுவனத்துக்கு குத்தகைக்கு விடுவது தொடர்பான,  திருத்தப்பட்ட உடன்பாட்டு வரைவு, வரும் ஏப்ரல் 25ஆம் நாள் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும் என்று ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

சிறிலங்காவில் 95 புதிய அரசியல் கட்சிகளை பதிவு செய்வது குறித்த நேர்காணல் ஆரம்பம்

சிறிலங்காவில் புதிய அரசியல் கட்சிகளைப் பதிவு செய்வதற்கான நேர்காணல் நடவடிக்கைகளை தேர்தல்கள் ஆணைக்குழு ஆரம்பித்துள்ளது.

சிறிலங்காவுக்கு எதிரான உடன்பாட்டில் கையெழுத்திடமாட்டேன் – சிறிலங்கா அதிபர்

எந்தவொரு சூழ்நிலையிலும் சிறிலங்காவுக்கு எதிரான உடன்பாட்டில் கையெழுத்திடமாட்டேன் என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். கொழும்பில் நேற்று ஊடக ஆசிரியர்களைச் சந்தித்துக் கலந்துரையாடிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

ஐந்து நாட்கள் பயணமாக செவ்வாயன்று புதுடெல்லி செல்கிறார் ரணில்

சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, ஐந்து நாட்கள் பயணமாக வரும் 25ஆம் நாள் இந்தியாவுக்குச் செல்லவுள்ளார். எனினும், ஒரே ஒரு நாள் மாத்திரமே இந்திய அரசாங்கத் தலைவர்களுடன் அவர் அதிகாரபூர்வ  பேச்சுக்களில் பங்கேற்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

காவி உடை, நீண்ட தாடியுடன் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டார் முருகன்

ராஜிவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள்தண்டனை அனுபவித்து வரும் முருகன் எனப்படும், சிறீதரன் காவி உடை தரித்த நிலையில் நேற்று வேலூர் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டார்.

சிறிலங்கா இராணுவத்துக்குள் உள்ள புற்றுநோய்

ஐ.நா அமைதி காக்கும் படையில் அங்கம் வகித்த சிறிலங்கா இராணுவ வீரர்கள் சில ஆண்டுகளுக்கு முன்னர் ஹெய்ற்றியில் எவ்வாறு பாலியல் சம்பவங்களில் ஈடுபட்டிருந்தனர் என்பது தொடர்பான அதிர்ச்சியான ஒரு பதிவை The Associated Press   ஊடகம்  அண்மையில் வெளியிட்டிருந்தது.