மேலும்

உண்ணாவிரதப் போராட்டத்தைக் கைவிட்டார் விமல் வீரவன்ச

wimal-arrest-1சிறைச்சாலையில் உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டிருந்த தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச இன்று தனது போராட்டத்தை கைவிட்டுள்ளார்.

அரச சொத்துக்களை தவறாகப் பயன்படுத்தினார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட விமல் வீரவன்ச இரண்டரை மாதங்களுக்கு மேலாக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

கொழும்பு மேல் நீதிமன்றத்தில் இவரது பிணை மனு நிராகரிக்கப்பட்டதையடுத்து, கடந்த மார்ச் 22ஆம் நாள் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்திருந்தார்.

இதையடுத்து, கடந்த மார்ச் 26 ஆம் நாள் வெலிக்கடைச் சிறைச்சாலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட விமல் வீரவன்சவின் உடல் நிலை மோசமானதையடுத்து, நேற்று கொழும்பு தேசிய மருத்துவமனைக்கு மாற்றப்பட்டிருந்தார்.

இந்த நிலையில், இன்று முற்பகல் அவர் ஒரு கோப்பை பால் அருந்தி தனது உண்ணாவிரதப் போராட்டத்தைக் கைவிட்டார்.

மல்வத்த, அஸ்கிரிய பீடாதிபதிகள் மற்றும் அரசியல் தலைவர்களின் கோரிக்கையை ஏற்றே அவர் உண்ணாவிரதப் போராட்டத்தைக் கைவிட்டதாக தேசிய சுதந்திர முன்னணியின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *