தமிழ் இளைஞர்களைக் கடத்திய கடற்படை அதிகாரிக்கு விளக்கமறியல் நீடிப்பு
கொழும்பில் தமிழ் இளைஞர்கள், மாணவர்கள் கடத்தப்பட்டு கப்பம் கோரப்பட்டு காணாமலாக்கப்பட்ட சம்பவங்கள் தொடர்பான குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சிறிலங்கா கடற்படை அதிகாரியை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்க கொழும்பு மேலதிக நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வெலிசறை கடற்படை மருத்துவமனையின் நிறைவேற்றுப் பணிப்பாளரான லெப்.கொமாண்டர் தம்மிக அனில், 2009ஆம் ஆண்டில் தமிழ் இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமலாக்க்பபட்ட சம்பவங்கள் தொடர்பாக கைது செய்யப்பட்டிருந்தார்.
அவர் நேற்று மீண்டும் கொழும்பு மேலதிக நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்ட போது, மார்ச் 23 ஆம் நாள் வரை அவரது விளக்கமறியல் உத்தரவு நீடிக்கப்பட்டது.
இந்த வழக்கில் மேலும் பல சிறிலங்கா கடற்படையினர் கைது செய்யப்படவுள்ளனர்.