மேலும்

ஜெனிவா தீர்மானம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்- ஐரோப்பிய ஒன்றியம்

eu-flagஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை சிறிலங்கா முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்று ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நேற்று உரையாற்றிய ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதியே, ஜெனிவா தீர்மானத்தை சிறிலங்கா முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

சிறிலங்கா தொடர்பான ஐ.நா மனித உரிமை ஆணையாளரின் அறிக்கையையும் ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதி வரவேற்றுள்ளார்.

அத்துடன், சிறிலங்காவில்  மனித உரிமைகள், நல்லிணக்கம், பொறுப்புக்கூறலை ஊக்குவிக்க,  30/1 தீர்மானம் முழுமையாகவும் நேரகாலத்துடனும் நிறைவேற்றப்பட வேண்டும் என்பதில் ஐரோப்பிய ஒன்றியம் அர்ப்பணிப்புடன் இருக்கிறது என்றும் ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதி தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *