சிறிலங்கா கடற்படைத் தளபதிக்கு ஆறு மாத சேவை நீடிப்பு
சிறிலங்கா கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்னவுக்கு, ஆறு மாத சேவை நீடிப்பு வழங்கப்பட்டுள்ளது. சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன இந்த சேவை நீடிப்பை வழங்கியுள்ளார்.
கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்னவின் பதவிக்காலம், நாளை 22ஆம் நாளுடன் நிறைவடைகின்ற நிலையிலேயே அவருக்கு ஆறு மாத கால சேவை நீடிப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.
இவர் கடந்த 2015 ஜூலை மாதம் சிறிலங்காவின் 20 ஆவது கடற்படைத் தளபதியாக பொறுப்பேற்றார்.