அபுதாபி பாதுகாப்பு கண்காட்சியில் சிறிலங்கா பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர்
பிந்திய நவீன ஆயுத, தளபாடங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ள, அபுதாபியில் நடைபெறும் ஐடெக்ஸ்-2017 அனைத்துலக பாதுகாப்பு கண்காட்சியில், சிறிலங்கா பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்த்தன பங்கேற்றுள்ளார்.
ஐக்கிய அரபு எமிரேட்சின் தலைநகரான அபுதாபியில் இந்தக் கண்காட்சி, கடந்த 19ஆம் நாள் ஆரம்பமாகி நடைபெற்று வருகிறது.
இந்தக கண்காட்சியில் பங்கேற்க சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கு, ஐக்கிய அரபு எமிரேட்சின் அதிபர், ஷேக் கலிபா பின் சையட் அல் நஹ்யன் அழைப்பு விடுத்திருந்தார்.
இந்த நிலையில் சிறிலங்கா அதிபரின் சார்பில் இந்தக் கண்காட்சிக்கு, பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்த்தன பங்கேற்றுள்ளார்.
தரை, கடல், மற்றும் வானில் போரிடுவதற்கான அனைத்து பாதுகாப்பு தளபாடங்களும், பிந்திய தொழில்நுட்பத்துடன் தயாரிக்கப்பட்டுள்ள நவீன போர்த் தளபாடங்களும், இந்தக் கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.