மேலும்

ரவிராஜ் கொலை வழக்கு – தீர்ப்புக்கு எதிராக மீளாய்வு மனு தாக்கல்

N.Ravirajநாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் படுகொலை தொடர்பாக, கொழும்பு மேல்நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு எதிராக, சசிகலா ரவிராஜ் நேற்று மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் மீளாய்வு மனுவொன்றைத் தாக்கல் செய்துள்ளார்.

ஜூரிகள் சபையின் முடிவுக்கு அமைய, ரவிராஜ் படுகொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட அனைவரையும் விடுவித்து, கொழும்பு மேல்நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது.

இந்த தீர்ப்புக்கு எதிராக சசிகலா ரவிராஜ் நேற்று மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ள மீளாய்வு மனுவில், குற்றம்சாட்டப்பட்டவர்கள் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழேயே கைது செய்யப்பட்டு, தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்ட நிலையில், தீர்ப்பை ஜூரிகள் தீர்மானிக்க முடியாது என்று கூறப்பட்டுள்ளது.

எனவே, ஜூரிகள் இன்றி இந்த வழக்கை விசாரிக்குமாறு மேல்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்றும் இந்த மனுவில் கோரப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *