கோத்தாவின் தேசப்பற்று மிக் விசாரணையில் அம்பலமாகும் – ராஜித சேனாரத்ன
சர்ச்சைக்குரிய மிக் போர் விமானக். கொள்வனவு பற்றிய விசாரணைகள், முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச எத்தகையவர் என்பதை அம்பலப்படுத்தும் என்று சிறிலங்காவின் அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
‘கோத்தாபய ராஜபக்ச தன்னை தேசப்பற்றாளர் போன்று எப்போதும் சித்திரித்து வந்துள்ளார். அவரது தேசப்பற்று எத்தகையது என்று, மிக் போர் விமானக் கொள்வனவு குறித்த விசாரணைகள் முடிவுக்கு வரும் போது தெரியவரும்.
முன்னைய ஆட்சியைப் போலல்லாது, தற்போதைய ஆட்சியில் ஊழல் செய்தவர்கள் மீது விசாரணைகள் நடத்தப்பட்டு சட்டரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
தற்போதைய கடற்படைத் தளபதி ஊடகவியலாளர் ஒருவரை தாக்கியதாக குற்றம்சாட்டுகின்றனர். முன்னைய கடற்படைத் தளபதி, இளைஞர் ஒருவர் காணாமற்போவதற்கு காரணமாக இருந்தார். அதுபற்றி யாரும் பேசுவதில்லை” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.