அமெரிக்க அதிபராக இன்று பதவியேற்கிறார் ட்ரம்ப் – கொழும்பில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்
அமெரிக்காவின் 45 ஆவது அதிபராக டொனால்ட் ட்ரம்ப் இன்று பதவியேற்கவுள்ள நிலையில், அவருக்கு எதிர்ப்புத் தெரிவித்து கொழும்பில் இன்று போராட்டம் ஒன்று நடத்தப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு நடந்த அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற குடியரசுக் கட்சியின் வேட்பாளரான டொனால்ட் ட்ரம்ப், இன்று அமெரிக்காவின் புதிய அதிபராகப் பதவியேற்கவுள்ளார்.
வெள்ளை மாளிகையில் நடைபெறும் நிகழ்வில் அவரது பதவியேற்பு விழா இடம்பெறவுள்ளது. இந்த விழாவுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன.
இந்த நிலையில் டொனால்ட் ட்ரம்ப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்து கொழும்பில் போராட்டம் ஒன்று நடத்தப்பட்டது. கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதரகத்துக்கு முன்பாக இந்தப் போராட்டம் இடம்பெற்றது.
சிறிதுங்க ஜெயசூரிய உள்ளிட்டஇடதுசாரி கட்சிகளைச் சேர்ந்தவர்கள் இந்தப் போராட்டத்தில் பங்கேற்றனர். டொனால்ட் ட்ரம்பின் இஸ்லாமிய எதிர்ப்பு, குடியேற்ற எதிர்ப்பு, காலநிலை மாற்ற உடன்பாட்டு எதிர்ப்பு நிலைப்பாடுகளைக் கண்டிக்கும் பதாகைகளையும் ஆர்ப்பாடடக்காரர்கள் ஏந்தியிருந்தனர்.