ரவிராஜ் கொலை சந்தேகநபர்களை கைது செய்ய சட்டமா அதிபர் அனுமதிக்கவில்லை – சிஐடி
நாடாளுமன்ற உறுப்பினர் ரவிராஜ் மற்றும் அவரது மெய்க்காவலர் ஆகியோர் கொழும்பில் படுகொலை செய்யப்பட்ட வழக்குடன் தொடர்புடைய இரண்டு முக்கிய சந்தேக நபர்களைக் கைது செய்வதற்கு சட்டமா அதிபர் அனுமதி அளிக்கவில்லை என்று சிறிலங்காவின் குற்றப் புலனாய்வுத்துறை தெரிவித்துள்ளது.
சுவிற்சர்லாந்துக்குத் தப்பிச் சென்ற இந்தப் படுகொலையின் இரண்டு முக்கிய சந்தேக நபர்களையும் கைது செது, நாடுகடத்துவதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர், சட்டமா அதிபரிடம் அனுமதி கோரப்பட்டது.
எனினும், அப்போது சட்டமா அதிபராக இருந்தவர் அரதற்கு அனுமதி அளிக்கவில்லை என்றும் குற்றப் புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது.
இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டிருந்த மேற்படி இருவர் உள்ளிட்ட அனைத்து சந்தேகநபர்களையும், சிறப்பு ஜூரிகள் சபை அண்மையில் விடுவித்துள்ளது.
எனினும் இந்த தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்யவுள்ளதாக தற்போதைய சட்டமா அதிபர் தெரிவித்துள்ளார்.