மேலும்

அம்பாந்தோட்டை துறைமுகத்தை கைப்பற்றும் சீனா – உன்னிப்பாக கவனிக்கிறது அமெரிக்கா

eagle-flag-usaஅம்பாந்தோட்டை துறைமுகத்தின் 80 வீத உரிமை சீனாவுக்கு விற்கப்படவுள்ளமை குறித்து, உன்னிப்பாக கவனிக்கப் போவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

அம்பாந்தோட்டை துறைமுகத்தின் 80 வீத உரிமையை சீன அரச நிறுவனம் ஒன்றுக்கு 99 ஆண்டு குத்தகைக்கு வழங்குவதற்கு சிறிலங்கா அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

இதுகுறித்து வொசிங்டன் எச்சரிக்கையுடன் செயற்படும் என்று அமெரிக்க ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.

“நாம் மிகக் கவனமாக கண்காணிப்போம். இவை நீண்டகால நோக்கில் தாக்கங்களை ஏற்படுத்தக் கூடும்” என்று அமெரிக்க உயர் அதிகாரி ஒருவர், வோல் ஸ்ட்ரீட் ஜேர்னலுக்கு தெரிவித்துள்ளார்.

எனினும், மூலோபாயக் கரிசனைகளை சிறிலங்காவின் அனைத்துலக அபிவிருத்தி அமைச்சர் மலிக் சமரவிக்கிரம நிராகரித்துள்ளார்.

இது முற்றிலும் வர்த்தக நோக்கம் கொண்டது என்றும், இதில் எந்த பிரச்சினையும் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

ஒரு கருத்து “அம்பாந்தோட்டை துறைமுகத்தை கைப்பற்றும் சீனா – உன்னிப்பாக கவனிக்கிறது அமெரிக்கா”

  1. gowrikanthan says:

    இது மணியோசைதான், அது எப்போதும் முன்னால்தான் வரும், பின்னால் வரும் யானை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *