தமிழ்நாடு முதல்வர் ஜெயலலிதா காலமானார்
தமிழ்நாடு முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா காலமாகி விட்டதாக அதிகாரபூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுதொடர்பான அதிகாரபூர்வ தகவல் இன்று சற்று நேரத்தில் அப்பல்லோ நிர்வாகத்தால் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ்நாடு முதல்வர் ஜெயலலிதா காலமான செய்தி வெளியானதும், அவர் அனுமதிக்கப்பட்டிருந்த அப்பல்லோ மருத்துவமனைக்கு வெளியே கூடியிருந்தவர்கள் கதறி அழுது கொண்டிருக்கின்றனர்.
அத்துடன், மருத்துவமனைக்கு வெளியே உணர்ச்சி வசப்பட்ட தொண்டர்கள், காவல்துறை தடுப்புகளை வீசி எறிந்து குழப்பங்களில் ஈடுபட்டுள்ளதால், பதற்றமான நிலை ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையே, அதிமுக தலைமையகத்தில் புதிய சட்டமன்றத் தலைவரைத் தெரிவு செய்வதற்காக அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் ஒன்றுகூடியுள்ளனர்.
அதிமுக தலைமையகத்தில் தற்போது, கட்சிக் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டுள்ளது. தமிழ்நபடு முதல்வரின் மறைவினால் தமிழ்நாடு எங்கு சோகத்தில் மூழ்கியுள்ளது.
உறுதிப்படுத்தவும். மரு. நிர்வாகம் மறுக்கிறது. இன்னும் அறிவிக்கப்படவில்லை.