ஜெயலலிதா உடல்நிலை மோசம் – தமிழ்நாட்டில் பதற்றம்
தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடல் நிலை தொடர்ந்தும், மிகவும் கவலைக்கிடமான நிலையில் இருப்பதாக பிந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜெயலலிதாவுக்கு தொடர்ந்தும் சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையிலும், அவரது உடல் நிலை மிகவும் மோசமான நிலையில் இருப்பதாக, சென்னை அப்பல்லோ மருத்துவமனை குழுமத்தைச் சேர்ந்த மருத்துவர் சங்கீதா ரெட்டி சற்றுமுன் தகவல் வெளியிட்டுள்ளார்.
அதேவேளை, ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த லண்டன் மருத்துவர் ரிச்சர்ட் பீலே, வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜெயலலிதாவின் உடல் நிலை மிகவும் மோசமான நிலையில் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில் தமிழ்நாட்டில் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது. சென்னையில் பாடசாலைகள் அரைநேரத்துடன் மூடப்பட்டுள்ளன.
தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளிலும் வர்த்தக நிலையங்களை மூடப்பட்டு வருவதாக பிந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.
அப்பல்லோ மருத்துவமனைப் பகுதியில் குழுமியுள்ள அதிமுக தொண்டர்கள் மிகவும் உணர்ச்சியமயமான நிலையில் உள்ளனர்.
இன்னும் சற்று நேரத்தில் தமிழ்நாடு ஆளுனர் வித்தியாசாகர் ராவ் அப்பல்லோ மருத்துவமனைக்குச் செல்லவுள்ளார்.