மேலும்

கைது செய்யப்பட்டார் கருணா – சிறப்பு பாதுகாப்புடன் சிறையில் அடைப்பு

image_1480419666-507d28c32cசிறிலங்காவின் முன்னைய அரசாங்கத்தில் பிரதி அமைச்சராக இருந்த கருணா எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் இன்று முற்பகல் நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டார்.

800 மில்லியன் ரூபா பெறுமதியான குண்டுதுளைக்காத அரச வாகனத்தை தவறாகப் பயன்படுத்தினார் என்று குற்றச்சாட்டின் பேரிலேயே, கருணாவை நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் கைது செய்தனர்.

இந்தக் குற்றச்சாட்டுத் தொடர்பாக வாக்குமூலம் அளிப்பதற்காக நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவு முன்னர், இன்று காலை கருணா முன்னிலையாகியிருந்தார்.

image_1480419666-507d28c32cimage_1480419771-bdab8f707aபடங்கள் – டெய்லி மிரர்

இதையடுத்தே, அவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட கருணா கொழும்பு பிரதம நீதிவான் கிகான் பிலாபிட்டிய முன்னிலையில் நிறுத்தப்பட்டார்.

அவரை, டிசெம்பர் 7ஆம் நாள் வரை விளக்கமறியலில் வைக்க நீதிவான் உத்தரவிட்டுள்ளார். அத்துடன் சிறைச்சாலையில் கருணாவுக்கு தனியான பாதுகாப்பு வழங்குமாறும், கொழும்பு பிரதம நீதிவான் உத்தரவிட்டார்.

ஒரு கருத்து “கைது செய்யப்பட்டார் கருணா – சிறப்பு பாதுகாப்புடன் சிறையில் அடைப்பு”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *