மேலும்

“ மனித உரிமை குற்றச்சாட்டுகளில் இருந்து விடுவியுங்கள்”- ட்ரம்பிடம் தஞ்சமடையும் சிறிலங்கா அதிபர்

donald-trumpமனித உரிமை குற்றச்சாட்டுகளில் இருந்து சிறிலங்காவை விடுவிக்குமாறு, அமெரிக்காவின் புதிய அதிபராகத் தெரிவு செய்யப்பட்டுள்ள டொனால்ட் ட்ரம்பிடம் வேண்டுகோள் விடுக்கவுள்ளார் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன.

இந்தக் குற்றச்சாட்டுகளில் இருந்து எம்மை விடுவியுங்கள் என்று அதிபர் ட்ரம்புக்கு கடிதம் எழுதப்போகிறேன் என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

மனித உரிமை, பொறுப்புக்கூறல்  குற்றச்சாட்டுகளில் இருந்து ட்ரம்ப் சிறிலங்காவை விடுவிப்பார் என்றும், அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

காலியில் நேற்று நடந்த சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்கு புதிய உறுப்பினர்களைச் சேர்த்துக் கொள்ளும் கூட்டத்தில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

ஐ.நா மனித உரிமைகள் பேரவைக்குத் தேவையான தகவல்களைக் கொடுத்து, முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவையும், எமது வீரம்மிக்க படையினரையும் என்னால் காப்பாற்ற முடிந்தது என்றும் சிறிலங்கா அதிபர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *