மேலும்

காவல்துறை தடைகளை மீறி தீபம் ஏற்ற தயாராகிறது கூட்டமைப்பு – கொழும்பு ஆங்கில வாரஇதழ்

deepamசிறிலங்கா காவல்துறை உத்தரவுகளை மீறி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற, மாகாணசபை உறுப்பினர்கள், இன்று மாவீரர் நாள் நிகழ்வுகளை பல்வேறு இடங்களில் நடத்துவதற்கு ஏற்பாடுகளை செய்து வருவதாக கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

கிளிநொச்சியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன், தீபம் ஏற்றவுள்ளதாகவும், நல்லூரில் வடமாகாணசபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் தீபம் ஏற்றி மாவீரர் நினைவு நிகழ்வை நடத்தவுள்ளதாகவும் கொழும்பு ஆங்கில வாரஇதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்ப்பாண செயலகத்திலும் கூட மாவீரர் நாள் நிகழ்வுகள் நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.

மாவீரர் நாளை நினைவு கூர முடியாது, என்று சிறிலங்கா அரசாங்கத்தின் அமைச்சர்களும், பாதுகாப்பு அமைச்சு அதிகாரிகளும் திரும்பத் திரும்ப வலியுறுத்தி வருகின்ற அதேவேளை, உயிரிழந்த தமது உறவுகளை நினைவு கூருவதற்குத் தடை இல்லை என்பதையும் சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

எனினும், மாவீரர் துயிலுமில்லங்களைத் சுத்தப்படுத்தி, அங்கு தீபம் ஏற்றுவதற்கான தயார்படுத்தல்களில் தமிழ் மக்கள் கடந்த இரண்டு நாட்களாக ஈடுபட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *