சிறிலங்கா கடற்படையின் கடல்சார் பாதுகாப்பு மாநாடு – திங்களன்று ஆரம்பம்
சிறிலங்கா கடற்படை ஆண்டுதோறும் நடத்தும் அனைத்துலக கடல்சார் பாதுகாப்புக் கருத்தரங்கான, ‘காலி கலந்துரையாடல்-2016’ , வரும் 28ஆம் நாள் ஆரம்பமாகவுள்ளது.
கொழும்பில் உள்ள காலிமுகத்திடல் விடுதியில் வரும் 28ஆம், 29ஆம் நாள்களில் நடைபெறவுள்ள இந்தக் கடல்சார் பாதுகாப்புக் கருத்தரங்கில், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் பிரதம விருந்தினர்களாக கலந்து கொள்ளவுள்ளனர்.
120 வெளிநாட்டுப் பிரதிநிதிகள் பங்கேற்கும் இந்த இரண்டு நாள் மாநாட்டில், ஏழு நாடுகளின் கடற்படைத் தளபதிகளும் பங்கேற்கவுள்ளதாக சிறிலங்கா கடற்படை தெரிவித்துள்ளது.
சிறிலங்காவில் போர் முடிவுக்கு வந்த பின்னர், பாதுகாப்பு அமைச்சின் அனுசரணையுடன், சிறிலங்கா கடற்படை ஆண்டு தோறும் இந்த பாதுகாப்புக் கருத்தரங்கை நடத்தி வருகிறது.
இம்முறை ஏழாவது கடல்சார் பாதுகாப்புக் கருத்தரங்கிற்கு ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளன.