மேலும்

சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையின் முன்னாள் கட்டளை அதிகாரி கைது

சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையின் முன்னாள் கட்டளை அதிகாரியான, பிரதி காவல்துறைமா அதிபர் கே.எல்.எம்.சரத்சந்திர கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

சிறப்பு அதிரடிப்படையின் வாகனங்களை தவறாகப் பயன்படுத்தினார் என்ற குற்றச்சாட்டில் இன்று பிரதி காவல்துறைமா அதிபர் கே.எல்.எம்.சரத்சந்திர கைது செய்யப்பட்டார்.

காவல்துறையின் சிறப்பு விசாரணைப் பிரிவினால், கொழும்பு பிரதம நீதிவான் முன்னிலையில் நிறுத்தப்பட்ட இவரை டிசெம்பர் 6ஆம் நாள் விளக்கமறியலில் வைக்க நீதிவான் உத்தரவிட்டார்.

சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவின் பாதுகாப்பு பிரிவுக்கான இணைப்புச் செயலராக பிரதி காவல்துறைமா அதிபர் கே.எல்.எம்.சரத்சந்திர கைது பணியாற்றியிருந்தார்.

இவர், சிறப்பு அதிரடிப்படையின் வாகனங்களை தவறாகப் பயன்படுத்தியதால், அரசாங்கத்துக்கு 146,690 ரூபா இழப்பு ஏற்படுத்தியதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளார்.

இவர் தற்போது சிறிலங்கா துடுப்பாட்ட நிறுவனத்தின் பாதுகாப்பு பணிப்பாளராக பதவி வகிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *