சிறிலங்கா கடற்படைத் தளபதியுடன் அவுஸ்ரேலிய எல்லைக் காவல் படை ஆணையாளர் பேச்சு
அவுஸ்ரேலிய எல்லைக் காவல் படை ஆணையாளர், ரோமன் குவாட்வ்லீக் சிறிலங்கா கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணவர்த்தனவைச் சந்தித்து, பேச்சுக்களை நடத்தியுள்ளார்.
சிறிலங்கா கடற்படைத் தலைமையகத்தில் நேற்று இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
இந்தச் சந்திப்பில் கொழும்பில் உள்ள அவுஸ்ரேலியத் தூதுவர் பிரைஸ் ஹட்செசன் மற்றும் அவுஸ்ரேலியாவின் எல்லை இறைமை நடவடிக்கை தளபதி மேஜர் ஜெனரல் அன்ரூ பொட்ரெல் ஆகியோரும், கலந்து கொண்டனர்.
இந்தச் சந்திப்பில் இருதரப்பு ஈடுபாடுள்ள விவகாரங்கள் குறித்து ஆராயப்பட்டுள்ளது.
குறிப்பாக படகுகள் மூலம் அகதிகள் அவுஸ்ரேலியா வருவதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளில் கூட்டாக இணைந்து செயற்படுவது குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது.