மேலும் மூன்று ஆவா குழு சந்தேகநபர்களுக்கு விளக்கமறியல்
யாழ்ப்பாணத்தில் ஆவா குழு என்ற பெயரில் குழப்பம் விளைவிக்க முயன்றவர்கள் என்ற சந்தேகத்தில் கைது செய்யப்பட்ட மேலும் மூன்று இளைஞர்கள் இன்று கொழும்பு மேலதிக நீதிவான நீதிமன்றத்தில் முன்னிறுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.
பயங்கரவாத தடுப்பு பிரிவு காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட இந்திரகுமார் கபிலோசன், இந்திரகுமார் நிருசன், திருச்செல்வம் பிரபூசன் ஆகியோரே இன்று கொழும்பு மேலதிக நீதிவான் அருணி ஆட்டிக்கல முன்னிலையில் நிறுத்தப்பட்டனர்.
இதையடுத்து இவர்கள் இருவரையும் நொவம்பர் 16ஆம் நாள் வரை விளக்கமறியலில் வைக்க நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.
ஆவா குழுவைச் சேர்ந்தவர்கள் என்ற சந்தேகத்தில் கைது செய்யப்பட்ட, மூன்று பேர் நேற்றும் கொழும்பு நீதிமன்றத்தில் முன்னிறுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர் என்பதுது குறிப்பிடத்தக்கது.