மேலும்

சிறிலங்கா அதிபர் இன்று மீண்டும் இந்தியா பயணம்

maithripala-srisenaசிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன இன்று இந்தியாவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார். இன்று பிற்பகல் அவர் புதுடெல்லியை வந்தடைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

புதுடெல்லியை வந்தடைந்ததும் அவர், இந்திய குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியைச் சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளார்.

நொய்டாவில் உள்ள இந்திய எக்ஸ்போ நிலையத்தில் நாளை நடைபெறும் உலக சுகாதார நிறுவனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள புகையிலைப் பயன்பாட்டைக் கட்டுப்படுத்துவது தொடர்பான ஏழாவது மாநாட்டில் பங்கேற்கவே, சிறிலங்கா அதிபர் இந்தியப் பயணத்தை மேற்கொள்ளவுள்ளார்.

கடந்த ஆண்டு ஜனவரி மாதம் சிறிலங்கா அதிபராகப் பதவியேற்ற மைத்திரிபால சிறிசேன, 22 மாதங்களில், புதுடெல்லிக்கு மேற்கொள்ளும் நான்காவது பயணம் இதுவாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *