மேலும்

மாதம்: August 2016

மகிந்த ஆதரவாளர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை – சுதந்திரக் கட்சி மத்திய குழு முடிவு

மகிந்த ராஜபக்ச ஆதரவு கூட்டு எதிரணியில் உள்ள சிறிலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பதற்கு, அந்தக் கட்சியின் மத்திய குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

விடுமுறையைக் கழிக்க வந்த நோர்வே பிரதமர் சிறிலங்கா தலைவர்களைச் சந்திக்கிறார்

விடுமுறையைக் கழிப்பதற்காக சிறிலங்கா வந்துள்ள நோர்வே பிரதமர் எர்ணா சோல்பேர்க், சிறிலங்கா அதிபர், பிரதமர் உள்ளிட்டோரைச் சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளார்.

யாழ். பல்கலைக்கழகத்தில் சிங்கள மாணவர்களின் பாதுகாப்புக்கு சிறிலங்கா அதிபர் உத்தரவாதம்

யாழ். பல்கலைக்கழகத்தில் சிங்கள மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தியுள்ள சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, எந்த அச்சமோ, சந்தேகமோ இன்றி கல்வியைத் தொடருமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.

ஐ.நா பொதுச்சபைக் கூட்டத்தில் உரையாற்றவுள்ளார் சிறிலங்கா அதிபர்

வரும் செப்ரெம்பர் 13ஆம் நாள் ஆரம்பமாகவுள்ள ஐ.நா பொதுச்சபையின் 71ஆவது கூட்டத்தொடரில் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவும் கலந்து கொண்டு உரையாற்றவுள்ளார்.

ஐரோப்பியரை விட ஐந்து மடங்கு அதிகம் மதுபானங்களை நுகரும் இலங்கையர்கள் – அதிர்ச்சித் தகவல்

சிறிலங்காவின் தனிநபர் மதுபான நுகர்வு ஐரோப்பாவை விட ஐந்து மடங்கு அதிகம் என்று தேசிய புகையிலை மற்றும் மதுபான அதிகாரசபையின் தலைவர் பாலித அபேகோன் தெரிவித்துள்ளார்.

சிறிலங்காவுக்கான ஐ.நாவின் புதிய வதிவிட இணைப்பாளராக உனா மக்கோலி

சிறிலங்காவுக்கான ஐ.நாவின் புதிய வதிவிட இணைப்பாளராகவும், ஐ.நா அபிவிருத்தித் திட்டத்துக்கான வதிவிடப் பிரதிநிதியாகவும், உனா மக்கோலி நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்தியா – சிறிலங்கா இடையே பாலம் அமைப்பது குறித்து உயர்மட்டப் பேச்சு – உறுதிப்படுத்தியது சிறிலங்கா

இந்தியாவுக்கும் சிறிலங்காவுக்கும் இடையில் பாலம் அமைப்பது தொடர்பான உயர்மட்டக் கலந்துரையாடல்கள் ஆரம்பிக்கப்பட்டிருப்பதாக சிறிலங்காவின் அரசதொழில் முயற்சிகள் அபிவிருத்தி அமைச்சர் கபீர் காசிம் தெரிவித்துள்ளார்.

ஜப்பான்- சீன அதிகாரப் போட்டிக்குள் சிக்கிக் கொள்ளுமா சிறிலங்கா?

சிறிலங்கா மீதான சீனாவின் செல்வாக்கு அதிகரித்துள்ள நிலையில், தற்போது ஜப்பானும் சிறிலங்கா மீதான தனது கவனத்தை அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.  இலங்கைத் தீவின் கரையோர பாதுகாப்புச் செயற்பாடுகளை மேற்கொள்வதற்கு ஜப்பான் சாதகமான பங்களிப்பை வழங்கி வருவதன் மூலம் சிறிலங்கா மீதான தனது செல்வாக்கை அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

சிறிலங்காவிடம் இழப்பீடு கோருவதைக் கைவிட்டது சீனா

கொழும்புத் துறைமுக நகரத் திட்டத்தை இடைநிறுத்தி வைத்தமைக்காக, சிறிலங்காவிடம் இழப்பீடு கோரும் முடிவை சீன நிறுவனம் கைவிட்டுள்ளதையடுத்து, சீனாவுடன் இதுபற்றிய புதிய உடன்பாடு ஒன்றைச் செய்து கொள்வதற்கு சிறிலங்கா அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.

இந்த வாரம் தென்கொரியா செல்கிறார் மகிந்த

சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச இந்தவாரம் தென்கொரியாவுக்குப் பயணம் மேற்கொள்ளவிருப்பதாக கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.