மேலும்

நாள்: 11th August 2016

ஒலிம்பிக் குத்துச்சண்டைப் போட்டி- மொங்கோலிய வீரரிடம் துளசி தருமலிங்கம் தோல்வி

றியோடி ஜெனீரோவில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டியில், நேற்று நடந்த குத்துச்சண்டைப் போட்டியில் கட்டார் நாட்டு அணியின் சார்பில் பங்கேற்ற, ஈழத் தமிழரான துளசி தருமலிங்கம், மொங்கோலிய நாட்டு வீரரிடம் தோல்வியடைந்தார்.

சிறுபான்மையினருக்கு எதிராக குற்றமிழைத்தவர்களை கைது செய்ய வேண்டும் – அமெரிக்கா

சிறிலங்காவில் மத சிறுபான்மையினருக்கு எதிரான குற்றங்களை இழைத்தவர்களை கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்தவும், எல்லா மக்களினதும் மத சுதந்திரத்தைப் பாதுகாக்கவும், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவும், உயர்மட்ட அரசாங்கத் தலைவர்களும் முன்வர வேண்டும் என்று அமெரிக்கா கோரியுள்ளது.

செயலணிக்குள் விக்னேஸ்வரனை சேர்க்க முடியாது – ரணில் திட்டவட்டம்

வடக்கு மாகாணத்தில் சிங்கள, முஸ்லிம் மக்களை மீளக்குடியேற்றுவதற்காக சிறிலங்கா அரசாங்கத்தினால் உருவாக்கப்பட்ட மீள்குடியேற்றச் செயலணியில் வடக்கு மாகாண முதலமைச்சரை உள்ளீர்ப்பதற்கு சிறிலங்கா அரசாங்கம் மறுத்துள்ளது.

தவறு செய்து விட்டோம்- புலம்பும் கம்மன்பில

காணாமற்போனோர் பணியகத்தை அமைக்கும் சட்டமூலத்துக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யத் தவறி விட்டதாக, மகிந்த ராஜபக்ச ஆதரவு கூட்டு எதிரணி ஒப்புக்கொண்டுள்ளது.

எட்கா உடன்பாடு குறித்துப் பேச சிறிலங்கா வருகிறார் இந்திய வர்த்தக அமைச்சர்

எட்கா உடன்பாடு தொடர்பாக பேச்சுக்களை நடத்துவதற்கு இந்தியாவின் வர்த்தக அமைச்சர் வி்ரைவில் சிறிலங்கா வருவார் என்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.