மேலும்

நாள்: 22nd August 2016

செப்ரெம்பர் 1ஆம் நாள் கொழும்பு வருகிறார் ஐ.நா பொதுச்செயலர்

ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூன், செப்ரெம்பர் மாதம் 1ஆம் நாள் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அமெரிக்க மருத்துவர்களுக்கு நெறிமுறை அனுமதி அளிக்கப்பட்டதா? – பல்கலைக்கழக ஆசிரியர்கள் சங்கம்

யாழ்ப்பாணத்தில் அமெரிக்க விமானப்படை மருத்துவர்கள் நடத்திய மருத்துவ முகாமில், இலங்கைக் குடிமக்களிடம் இருந்து இரத்த மாதிரிகளை பரிசோதனைக்காக பெறுவதற்கு சிறிலங்காவின் உரிய அதிகாரிகளிடம் நெறிமுறை அனுமதி பெறப்பட்டதா என்று, தேசிய பல்கலைக்கழக ஆசிரியர்கள் சங்கம் கேள்வி எழுப்பியுள்ளது.

வடக்கில் விகாரைகள், புத்தர் சிலைகளை அமைக்க பிக்குகளுக்கு உரிமை உள்ளதாம்

வடக்கில் எந்தப் பகுதியிலும் பௌத்த விகாரைகளை கட்டுவதற்கோ, புத்தர் சிலைகளை வைப்பதற்கோ உரிமை உள்ளது என்று சிறிலங்காவின் புனர்வாழ்வு, மீள்குடியேற்ற மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.

முன்னாள் போராளிகளுக்கு மருத்துவ பரிசோதனை – காலை வாரியது அமெரிக்கா

முன்னாள் போராளிகளுக்கு மருத்துவ பரிசோதனை நடத்த அமெரிக்கத் தூதுவர் இணங்கிய போதிலும், யாழ்ப்பாணத்தில் மருத்துவ முகாம் நடத்திய அமெரிக்க விமானப்படை மருத்துவர்கள், முன்னாள் போராளிகளுக்கான மருத்துவ பரிசோதனைகளை நடத்த மறுத்து விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கிழக்கில் படைமுகாம்கள் அகற்றப்படாது – சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு

கிழக்கு மாகாணத்தில் உள்ள முக்கியமான சிறிலங்கா இராணுவ முகாம்கள் அகற்றப்படாது என்று சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.

திருப்பதியில் சிறிலங்கா அதிபரை நிர்க்கதியாக நிற்க விட்ட சாரதி

திருப்பதி ஏழுமலையான் ஆலயத்தில் நேற்று வழிபாடு நடத்தச் சென்றிருந்த சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, கார் சாரதி காணாமற்போனதால், 12 நிமிடங்களுக்கு மேலாக காரில் காத்திருக்க நேரிட்டது.