மேலும்

ஐ.நா பொதுச்சபைக் கூட்டத்தில் உரையாற்றவுள்ளார் சிறிலங்கா அதிபர்

maithri-unவரும் செப்ரெம்பர் 13ஆம் நாள் ஆரம்பமாகவுள்ள ஐ.நா பொதுச்சபையின் 71ஆவது கூட்டத்தொடரில் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவும் கலந்து கொண்டு உரையாற்றவுள்ளார்.

71ஆவது ஐ.நா பொதுச்சபைக் கூட்டத் தொடர் குறித்த நிகழ்ச்சி நிரல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

வழக்கமான மரபுப்படி பிரேசில் அதிபர் பொதுச்சபையின் விவாதத்தை ஆரம்பித்து வைப்பார்.  அதையடுத்து அமெரிக்க அதிபர் உரையாற்றுவார்.

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன , பங்களாதேஸ் பிரதமர் ஆகியோரும் பொதுச்சபையில் உரையாற்றுவர்.

எனினும் இந்தியப்பிரதமர் நரேந்திர முாடி இம்முறை பொதுச்சபைக் கூட்டத்தில் பங்கேற்கமாட்டார். அவருக்குப் பதிலாக இந்திய வெளிவிவகார அமைச்சரே இந்தியக் குழுவுக்கு தலைமை தாங்கவுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *