மேலும்

நாள்: 16th August 2016

சம்பந்தன் மீது ஒலிவாங்கியை வீசித் தாக்கவில்லை – அன்ரனி ஜெகநாதன்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனை தான் தாக்கவில்லை என்று வடமாகாணசபையின் பிரதி அவைத்தலைவர் அன்ரனி ஜெகநாதன் தெரிவித்தார். வட மாகாண சபையின் மாதாந்த அமர்வு இன்று நடைபெற்ற போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

வலி.வடக்கில் மீளக்குடியேற அனுமதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்வையிட்டார் அமெரிக்க தூதுவர்

யாழ்ப்பாணத்துக்கு நேற்றுப் பயணம் மேற்கொண்டிருந்த அமெரிக்கத் தூதுவர் அதுல் கெசாப், வலி.வடக்கில் மீளக்குடியேற அனுமதிக்கப்பட்ட பகுதிகளுக்குச் சென்று பார்வையிட்டார்.

சம்பந்தன் மீது ஒலிவாங்கியை வீசி எறிந்தார் அன்ரனி ஜெகநாதன்

வவுனியாவில் நடந்த இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டத்தின் போது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் மீது, வட மாகாணசபை பிரதி அவைத் தலைவர் அன்ரனி ஜெயகநாதன், ஒலிவாங்கியை வீசி எறிந்ததாக கூறப்படுகிறது.

யாழ்ப்பாணத்தில் அமெரிக்கத் தூதுவர் – நாடாளுமன்ற, மாகாணசபை உறுப்பினர்களுடன் சந்திப்பு

யாழ்ப்பாணத்துக்கு நேற்றுப் பயணம் மேற்கொண்டிருந்த அமெரிக்கத் தூதுவர் அதுல் கெசாப், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் வடக்கு மாகாணசபை உறுப்பினர்களுடன் தனித்தனியாக பேச்சுக்களை நடத்தினார்.

யாழ்ப்பாணத்தில் அமெரிக்க விமானப்படையின் “ஒப்பரேசன் பசுபிக் ஏஞ்சல்”

யாழ்ப்பாணத்தில் அமெரிக்காவின் பசுபிக் கட்டளைப்பீடத்தின் விமானப்படையினர் ஒப்பரேசன் பசுபிக் ஏஞ்சல் என்ற மனிதாபிமான உதவி நடவடிக்கையை ஆரம்பித்துள்ளனர்.

றோவின் முகவராகச் செயற்பட்டார் மாத்தயா – புதிய நூலில் வெளியாகியுள்ள தகவல்கள்

விடுதலைப் புலிகளின் பிரதித் தலைவராக இருந்த மாத்தயா எனப்படும் கோபாலசாமி மகேந்திரராஜா, இந்தியாவின் வெளியகப் புலனாய்வுப் பிரிவான றோவின் முகவராகச் செயற்பட்டிருந்தார் என்று, இந்திய ஊடகவியலாளர் நீனா கோபால் எழுதி, வெளியாகியுள்ள நூல் ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.