மேலும்

யாழ். பல்கலைக்கழகத்தில் சிங்கள மாணவர்களின் பாதுகாப்புக்கு சிறிலங்கா அதிபர் உத்தரவாதம்

maithriயாழ். பல்கலைக்கழகத்தில் சிங்கள மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தியுள்ள சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, எந்த அச்சமோ, சந்தேகமோ இன்றி கல்வியைத் தொடருமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.

சிறிலங்கா அதிபர் செயலகத்தில் நேற்று, யாழ் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் சிங்கள மாணவர்களின் பெற்றோர்கள் மற்றும் யாழ்.பல்கலைக்கழக துணைவேந்தர் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகளுடன் நடத்திய கலந்துரையாடலின் போதே அவர் இந்த உறுதிமொழியை அளித்துள்ளார்.

இந்தக் கலந்துரையாடலில் யாழ். பல்கலைக்கழக விஞ்ஞான பீட மாணவர்களுக்கு இடையில் நடந்த மோதல் மற்றும் அதனையடுத்து ஏற்பட்டுள்ள சூழல் குறித்து கலந்துரையாடப்பட்டது.

எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் இடம்பெறாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று இந்தச் சந்திப்பில் துணைவேந்தர் பேராசிரியர் வசந்தி அரசரட்ணம் தெரிவித்தார்.

இந்தச் சந்திப்பில் கருத்து வெளியிட்ட சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, மாணவர்களின் பாதுகாப்புக்கு அரசாங்கம் முழுப் பொறுப்பு என்று உறுதியளித்தார்.

இதையடுத்து, யாழ்.பல்கலைக்கழகத்தின் அனைத்துப் பீடங்களின் கல்விச் செயற்பாடுகளும் வழமை நிலைக்குத் திரும்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *