மேலும்

நாள்: 24th August 2016

மலேசியா கிளம்புகிறார் மகிந்த – மாநாடு, பான் கீ முனை தவிர்க்க முயற்சி

ஆசிய பசுபிக் நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றியத்தின் அனைத்துலக மாநாட்டில் பங்கேற்பதற்கு, சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச மலேசியாவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.

திருகோணமலையில் அமெரிக்க கடற்படைச் செயலர் – கூட்டுப் பயிற்சியை ஆய்வு

அமெரிக்காவின் கடற்படைச் செயலர் ரே மபுஸ், சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டு, திருகோணமலை கடற்படைத் தளத்தில் நடக்கும், கூட்டுப் பயிற்சிகளை பார்வையிட்டுள்ளார்.

எக்னெலிகொடவுக்கும் புலிகளுக்கும் தொடர்பு இல்லை – நீதிமன்றில் புலனாய்வுப் பிரிவு அறிக்கை

கடத்தப்பட்டு காணாமற்போகச் செய்யப்பட்ட ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடவுக்கு, விடுதலைப் புலிகளுடன் எந்தத் தொடர்பும் இருந்திருக்கவில்லை என்று, தமது விசாரணைகளில் தெரியவந்திருப்பதாக, சிறிலங்காவின் குற்றப்புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

இரண்டு மாதங்களில் புதிய அரசியலமைப்பு – பொதுவாக்கெடுப்பும் நடத்தப்படும்

இன்னும் இரண்டு மாதங்களில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் புதிய அரசியலமைப்பு யோசனை, தொடர்பாக மக்கள் கருத்தறியும் பொதுவாக்கெடுப்பு நடத்தப்படும் என்று சிறிலங்கா அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

சிறிலங்காவில் மற்றொரு அமெரிக்க உயர்மட்ட இராஜதந்திரி

சிறிலங்காவுடனான இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவது குறித்த பேச்சுக்களை நடத்துவதற்காக, அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் தெற்கு மத்திய ஆசிய விவகாரங்களுக்கான முதன்மை பிரதி உதவிச் செயலர் வில்லியம் ஈ ரொட் நேற்று சிறிலங்கா வந்துள்ளார்.