மேலும்

நாள்: 3rd August 2016

ஜப்பான்- சீன அதிகாரப் போட்டிக்குள் சிக்கிக் கொள்ளுமா சிறிலங்கா?

சிறிலங்கா மீதான சீனாவின் செல்வாக்கு அதிகரித்துள்ள நிலையில், தற்போது ஜப்பானும் சிறிலங்கா மீதான தனது கவனத்தை அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.  இலங்கைத் தீவின் கரையோர பாதுகாப்புச் செயற்பாடுகளை மேற்கொள்வதற்கு ஜப்பான் சாதகமான பங்களிப்பை வழங்கி வருவதன் மூலம் சிறிலங்கா மீதான தனது செல்வாக்கை அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

சிறிலங்காவிடம் இழப்பீடு கோருவதைக் கைவிட்டது சீனா

கொழும்புத் துறைமுக நகரத் திட்டத்தை இடைநிறுத்தி வைத்தமைக்காக, சிறிலங்காவிடம் இழப்பீடு கோரும் முடிவை சீன நிறுவனம் கைவிட்டுள்ளதையடுத்து, சீனாவுடன் இதுபற்றிய புதிய உடன்பாடு ஒன்றைச் செய்து கொள்வதற்கு சிறிலங்கா அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.

இந்த வாரம் தென்கொரியா செல்கிறார் மகிந்த

சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச இந்தவாரம் தென்கொரியாவுக்குப் பயணம் மேற்கொள்ளவிருப்பதாக கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

துறைமுக நகரத் திட்டம் இடைநிறுத்தப்பட்டதற்கு இந்தியாவே காரணம் – சிறிலங்கா அரசு ஒப்புதல்

மகிந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்தில், சீனாவின் முதலீட்டுடன் ஆரம்பிக்கப்பட்ட  கொழும்புத் துறைமுக நகரத் திட்டம், இந்தியாவின் அழுத்தங்களினால் தான் இடைநிறுத்தப்பட்டது என்று சிறிலங்கா அரசாங்கம் முதல்முறையாக ஒப்புக் கொண்டுள்ளது.

முன்னாள் போராளிகளுக்கு மருத்துவ பரிசோதனை நடத்த தயார்- சிறிலங்கா அரசு

போரின் முடிவில் சரணடைந்த முன்னாள் போராளிகள் தடுத்து வைக்கப்பட்டிருந்த காலத்தில் அல்லது புனர்வாழ்வு அளிக்கப்பட்ட காலத்தில், உடல் ரீதியாக அவர்களுக்கு பாதிப்புகள் ஏற்படுத்தப்பட்டிருந்தால், அதுகுறித்த மருத்துவ பரிசோதனைகளை நடத்த தயாராக இருப்பதாக, சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது.