வடக்கில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ள நிலஅபகரிப்பு விவகாரம்
வடக்கிலுள்ள தனியார் நிலங்களைக் கையகப்படுத்தும் சிறிலங்கா அரசாங்கத்தின் நடவடிக்கை தமிழ் மக்கள் மத்தியில் எதிர்ப்பைத் தோற்றுவித்துள்ளது. தனியார் நிலங்களைக் கையகப்படுத்துவதன் மூலம் சிறிலங்கா அரசாங்கமானது அனைத்துலக சமூகத்தைத் தவறாக வழிநடத்துவதாகவும் தமிழ் மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.