சிறிலங்காவுக்கான ஐ.நாவின் புதிய வதிவிட இணைப்பாளராக உனா மக்கோலி
சிறிலங்காவுக்கான ஐ.நாவின் புதிய வதிவிட இணைப்பாளராகவும், ஐ.நா அபிவிருத்தித் திட்டத்துக்கான வதிவிடப் பிரதிநிதியாகவும், உனா மக்கோலி நியமிக்கப்பட்டுள்ளார்.
அவர் நேற்று சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவைச் சந்தித்து தமது நியமன ஆவணங்களைச் சமர்ப்பித்தார்.
சிறிலங்காவில் செயற்படும் ஐ.நாவின் 21 வதிவிட மற்றும் வதிவிடமற்ற முகவர் அமைப்புகளுக்கு, இவர் தலைமை தாங்குவார் என்பதுடன், ஐ.நா பொதுச்செயலரின் சிறிலங்காவுக்கான பிரதிநிதியாகவும் செயற்படுவார்.
முன்னதாக, இவர் யுனிசெவ்வின் சிறிலங்காவுக்கான வதிவிடப் பிரதிநிதியாக நான்கு ஆண்டுகள் பணியாற்றியிருந்தார்.
அத்துடன் பனாமா, டோகோ, சூடான், கென்யா, அங்கோலா, ஆகிய நாடுகளின் ஐ.நா அமைப்புகளில் இவர் பணியாற்றியுள்ளார்.