மேலும்

வடக்கு மக்கள் சமஷ்டியில் ஆர்வம் காட்டவில்லையாம் – லால் விஜேநாயக்க

Lal Wijenayakeவடக்கிலுள்ள மக்கள் சமஷ்டி ஆட்சிமுறையில் ஆர்வம் காட்டவில்லை என்று  அரசியலமைப்பு சீர்திருத்தத்துக்கான ஆலோசனைகளைப் பெறும் குழுவின் தலைவரான சட்டவாளர் லால் விஜேநாயக்க தெரிவித்துள்ளார்.

விசும்பாயவில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

”அரசியலமைப்புச் சீர்திருத்தம் தொடர்பாக எமது குழு வடக்கில் மேற்கொண்ட ஆய்வின் போது, வடக்கிலுள்ள அரசியல்வாதிகள் மட்டும் தான், சமஷ்டித் தீர்வில் ஆர்வம்காட்டினர்.

வடக்கிலுள்ள பெரும்பாலான மக்கள் ஒற்றையாட்சிக்குத் தான் ஆதரவளித்தனர்.

தேச வழமைச் சட்டத்தினால் வடக்கில் உள்ள பல பெண்கள் நெருக்கடியை சந்திக்கின்றனர்.  கணவன் காணாமற்போன நிலையில் உள்ள பெண்கள் தமது சொத்துக்களை பிள்ளைகளுக்கு எழுதிக் கொடுக்க முடியாத நிலையில் உள்ளனர்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *