மேலும்

அமெரிக்க உதவிச் செயலர்கள் சிறிலங்கா பிரதமர், பாதுகாப்புத் தரப்புடன் பேசவுள்ளனர்

nisha-tomசிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் உதவிச் செயலர்களான நிஷா பிஸ்வால் மற்றும் ரொம் மாலினோவ்ஸ்கி ஆகியோர் இன்று சி்றிலங்கா பிரதமரையும், பாதுகாப்புத் தரப்பினரையும் சந்தித்துப் பேசவுள்ளனர்.

அலரி மாளிகையில் இன்று காலை சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை, அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் தெற்கு மத்திய ஆசிய விவகாரங்களுக்கான உதவிச் செயலர் நிஷா பிஸ்வால் மற்றும் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் ஜனநாயகம், மனித உரிமைகள் மற்றும் தொழிலாளர் விவகாரங்களுக்கான உதவிச்செயலர் ரொம் மாலினோவ்ஸ்கி ஆகியோர் சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளனர்.

அத்துடன், சிறிலங்காவின் பாதுகாப்புச் செயலர் கருணாசேன ஹெற்றியாராச்சி மற்றும் முப்படைகளின் தளபதிகளையும் அவர்கள் கொழும்பில் சந்தித்துப் பேசவுள்ளனர்.

இதன்போது, நல்லிணக்க மற்றும் பொறுப்புக்கூறல் செயல்முறைகளில் காணப்படும் முன்னேற்றங்கள் மற்றும் சவால்கள் குறித்தும், பாதுகாப்பு மறுசீரமைப்பு விவகாரம் குறித்தும் கவனம் செலுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதேவேளை, அமெரிக்காவின் உதவி இராஜாங்கச் செயலர்கள் இருவரும் நாளை திருகோணமலைக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளனர்.

அங்கு அவர்கள், கிழக்கு மாகாண ஆளுனர் மற்றும் முதலமைச்சரைச் சந்தித்துப் பேசவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *