அமைச்சரவையின் கூட்டுப்பொறுப்பை மீறிவிட்டார் மங்கள சமரவீர – மகிந்த அணி குற்றச்சாட்டு
அமைச்சரவையின் கூட்டுப் பொறுப்பை மீறிய வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவுக்கு எதிராக, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, மகிந்த ஆதரவு கூட்டு எதிரணி கோரிக்கை விடுத்துள்ளது.
கொழும்பில் நேற்று நடந்த செய்தியாளர் சந்திப்பில், கருத்து வெளியிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் தினேஸ் குணவர்த்தன,
மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரிக்கும் பொறிமுறையில் வெளிநாட்டு நீதிபதிகள் இடம்பெறமாட்டார்கள் என்று சிறிலங்கா அதிபர் வெளியிட்ட கருத்தை, அவரது தனிப்பட்ட கருத்து என்று கூறி, சவாலுக்குட்படுத்தியுள்ளார் மங்கள சமரவீர,
சிறிலங்கா அதிபர் அரசாங்னகத்தின் தலைவர். அமைச்சரவையை நியமிக்கும் பொறுப்பு அவருக்கே உள்ளது. வெளிநாட்டு நீதிபதிகள் விவகாரத்தில் அரசாங்கத்தின் நிலையையே அவர் வெளியிட்டிருந்தார்.
எனினும், அமைச்சர் மங்கள சமரவீர வேறுவிதமாக கருத்து வெளியிட்டுள்ளார். இது அமைச்சரவையின் கூட்டுப்பொறுப்பை மீறுகின்ற செயல்.
எனவே மங்கள சமரவீரவுக்கு எதிராக சிறிலங்கா அதிபர் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றும் தெரிவித்தார்.