மேலும்

ஐ.நா மனித உரிமை ஆணையாளரைச் சந்தித்தார் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர்

zeid-mangalaஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசேனை, சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார். ஜெனிவாவில் உள்ள ஐ.நா செயலகத்தில் இந்தச் சந்திப்பு நேற்றுக்காலை இடம்பெற்றது.

ஐ.நா மனித உரிமை ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசேன், சிறிலங்கா தொடர்பான வாய்மூல அறிக்கையை நேற்று பிற்பகல், ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்க முன்னதாக இந்தச் சந்திப்பு இடம்பெற்றிருந்தது.

இந்தச் சந்திப்பை ஜெனிவா சென்றுள்ள சிறிலங்கா வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் மஹிஷினி கொலன்னே, உறுதிப்படுத்தியுள்ளார்.

zeid-mangala

எனினும், இந்தச் சந்திப்பில் பேசப்பட்ட விடயங்கள் தொடர்பாக அவர் எந்தக் கருத்தையும் வெளியிடவில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *