சிறிலங்காவுக்கு 16 திருவள்ளுவர் சிலைகள் – சென்னையில் அன்பளிப்பு
சிறிலங்காவில் உள்ள 16 கல்வி நிறுவனங்களில் நிறுவுவதற்காக 16 திருவள்ளுவர் சிலைகள் சென்னையில் நேற்று அன்பளிப்பாக வழங்கப்பட்டன.
நேற்று சென்னையில் நடந்த நிகழ்வில், விஜிபி உலகத் தமிழ் சங்கத்தின் சார்பில் அதன் நிறுவுனர் வி.ஜி.சந்தோசம் இந்தச் சிலைகளை, சென்னையில் உள்ள சிறிலங்கா உதவித் தூதுவர் கிருஸ்ணமூர்த்தி மற்றும், சிறிலங்கா கல்வி அமைச்சின் செயலாளர் ஆகியோரிடம் ஒப்படைத்தார்.
நல்லெண்ண அடிப்படையில் இந்த திருவள்ளுவர் சிலைகள் சிறிலங்காவுக்கு வழங்கப்பட்டுள்ளன. இவை பல்வேறு கல்வி நிறுவனங்களிலும் நிறுவப்படவுள்ளதாக வி.ஜி.சந்தோசம் தெரிவித்தார்.