மேலும்

இன்று அவசரமாக கூடுகிறது தேசிய பாதுகாப்புச் சபை

salawa-camp-fireகொஸ்கம- சலாவ இராணுவ முகாம் ஆயுதக் கிடங்கில் நேற்றுமாலை ஏற்பட்ட பாரிய வெடிவிபத்துக் குறித்து ஆராய்வதற்காக, சிறிலங்காவின் தேசிய பாதுகாப்புச் சபை அவசரமாக இன்று கூடவுள்ளது.

இந்த வெடிவிபத்துத் தொடர்பாக நேற்றிரவு, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் ஆலோசனை நடத்தியிருந்தனர்.

இதையடுத்தே, இன்று அவசரமாக தேசிய பாதுகாப்புச் சபைக் கூட்டத்தைக் கூட்டி முப்படைகளின் தளபதிகளுடன் ஆலோசனை நடத்துவதென முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதேவேளை, இந்த வெடிவிபத்துக் குறித்து சி்றிலங்கா இராணுவம் விசாரணைகளை நடத்தும் என்று சிறிலங்காவின் அமைச்சரவைப் பேச்சாளர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *