மேலும்

நிதிமோசடி வழக்கு – மீண்டும் கைது செய்யப்பட்டார் பசில்

basil-remand (1)சிறிலங்காவின் முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச, நிதிமோசடிக் குற்றச்சாட்டில் இன்று மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார்.

தொம்பே, மபிரிகம பகுதியில் உள்ள 16 ஏக்கர் காணியை கொள்வனவு செய்ததில் நிதி மோசடி செய்திருப்பதாக, குற்றம்சாட்டி நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவினர் இன்று அவரைக் கைது செய்தனர்.

இன்று நிதிக்குற்ற விசாரணைப் பிரிவுக்கு, விசாரணைக்காக அழைக்கப்பட்ட அவர், விசாரணைகளின் முடிவில் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவரை, பூகொட நீதிவான் நீதிமன்றத்தில் காவல்துறையினர் முன்னிறுத்திய போது, பிணையில் விடுவிக்க நீதிவான் உத்தரவிட்டார். அத்துடன் பசில் ராஜபக்சவின் கடவுச்சீட்டை முடக்கி வைக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பசில் ராஜபக்ச ஏற்கனவே திவிநெகும நிதி மோசடி, மாத்தறை காணி கொள்வனவு மோசடி, ஆகிய வழங்குகளில் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *