மேலும்

அரநாயக்க பகுதியில் மீண்டும் நிலச்சரிவு

landslideகேகாலை மாவட்டம் அரநாயக்க பகுதியில் இன்று பிற்பகல் மீண்டும் பாரிய நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதாக, அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

அரநாயக்க- ஹபரகலகந்த பகுதியிலேயே இந்த நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. அந்தப் பகுதிக்கு அனர்த்த முகாமைத்துவ அதிகாரிகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

இதில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் தொடர்பான தகவல்கள் இன்னமும் தெரியவரவில்லை.

ஏற்கனவே கடந்த செவ்வாய்க்கிழமை, அரநாயக்க பகுதியில் உள்ள மூன்று கிராமங்கள், நிலச்சரிவில் புதையுண்டன. அங்கிருந்த 134 பேரின் கதி இன்னமும் தெரியாதிருப்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *