மேலும்

25 மெட்ரிக் தொன் உதவிப்பொருட்களுடன் கொழும்பு வந்தது இந்தியப் போர்க்கப்பல்

ins-sunayna-aid (1)சிறிலங்காவில் அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு இந்தியா அனுப்பி வைத்த அவசர நிவாரண உதவிப்பொருட்களை ஏற்றிய ஐஎன்எஸ் சுனைனா என்ற ஆழ்கடல் ரோந்துக் கப்பல் இன்று காலை கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்தது.

இந்தக் கப்பலில் எடுத்து வரப்பட்ட உதவிப் பொருட்களை, கொழும்பிலுள்ள இந்தியத் தூதுவர் வை.கே.சின்ஹா, சிறிலங்காவின் பிரதி வெளிவிவகார அமைச்சர் ஹர்ஷ டி சில்வாவிடம் முறைப்படி கையளித்தார்.

இந்த நிகழ்வில் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சின் செயலர் சித்ராங்கனி வகீஸ்வராவும் கலந்து கொண்டார்.

ins-sunayna-aid (1)

ins-sunayna-aid (2)ins-sunayna-aid (3)

ஐஎன்எஸ் சுனைனா என்ற போர்க்கப்பலில், 25 மெட்ரிக் தொன் உதவிப் பொருட்கள் எடுத்து வரப்பட்டுள்ளன.

இந்தியா உதவிப் பொருட்களை அனுப்பியுள்ள இந்தியக் கடற்படையின் மற்றொரு கப்பலும் இன்று கொழும்புத் துறைமுகத்தை வந்தடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *