புதுடெல்லியில் மைத்திரி- மோடி சனிக்கிழமை சந்திப்பு
சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கும், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கும் இடையில். எதிர்வரும் 14ஆம் நாள், சனிக்கிழமை சந்திப்பு இடம்பெறவுள்ளது. புதுடெல்லியில் இந்தச் சந்திப்பு இடம்பெறும் என்று சிறிலங்கா அதிபர் செயலக பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
மத்தியப் பிரதேச மாநிலத்தில் உள்ள உஜ்ஜெயினில் நடைபெறும் இந்து மத விழாவில் பங்கேற்க, பாரதீய ஜனதா கட்சி சார்பில் சிறிலங்கா அதிபருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்த அழைப்பை ஏற்று, இந்தியா செல்லும் போதே, இந்தியப் பிரதமருக்கும் சிறிலங்கா அதிபருக்கும் இடையிலான சந்திப்பு இடம்பெறவுள்ளது.
பாரதீய ஜனதா கட்சியின் பொதுச்செயலர் தனிப்பட்ட முறையில் சிறிலங்கா அதிபருக்கான அழைப்பை நேரில் வந்து கையளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.