சிறிலங்கா வெளிவிவகாரச் செயலராகிறார் எசல வீரக்கோன்? – இந்தியாவுக்கான தூதுவராக சித்ராங்கனி
சிறிலங்கா வெளிவிவகார அமைச்சின் புதிய செயலராக, புதுடெல்லியில் உள்ள சிறிலங்கா தூதுவர் எசல வீரக்கோன், நியமிக்கப்படவுள்ளார்.
சிறிலங்கா வெளிவிவகார அமைச்சின் செயலராக உள்ள சித்ராங்கனி வகீஸ்வரா எதிர்வரும் 30ஆம் நாளுடன் ஓய்வுபெறவுள்ளார். இவரது இடத்துக்கே, எசல வீரக்கோன் நியமிக்கப்படவுள்ளார்.
அதேவேளை, இம்மாத இறுதியில் ஓய்வுபெற்ற பின்னர் சித்ராங்கனி வகீஸ்வரா, இந்தியாவுக்கான சிறிலங்கா தூதுவராக நியமிக்கப்படவுள்ளார்.
அதேவேளை, சிறிலங்கா வெளிவிவகார அமைச்சில் மேலும் சில மாற்றங்கள் அடுத்தடுத்த வாரங்களில் இடம்பெறும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.