சீனா- சிறிலங்கா இடையே வலுவான பாதுகாப்பு உறவுகள் நீடிப்பு
சீனாவுக்கும் சிறிலங்காவுக்கும் இடையிலான பாதுகாப்பு உறவுகள் வலுவான நிலையில் இருப்பதாக சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கருணாசேன ஹெற்றியாராச்சி தெரிவித்துள்ளார்.
சீனாவின் சின்ஹுவா செய்தி நிறுவனத்துக்கு அளித்துள்ள செவ்வியில் அவர், “சீனாவும் சிறிலங்காவும் பாதுகாப்பு உறவுகளை நன்றாகப் பேணி வருகின்றன.
இராணுவப் பயிற்சி உள்ளிட்ட இந்தப் பாதுகாப்பு உறவுகள் தொடர்ந்து வளர்ந்து வருகின்றன. இது மேலும் வலுப்படுத்தப்படும்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.